உலகம் செய்தி

அடுத்த மாதம் இஸ்ரேல் செல்ல உள்ள இந்திய பிரதமர் மோடி

இரு நாடுகளுக்கும் இடையே வேகமாக விரிவடைந்து வரும் மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) பிப்ரவரியில் இஸ்ரேலுக்கு(Israel) விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார்(Reuven Azar) தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருகை தருமாறு முறையாக அழைத்துள்ளதாகவும் விரைவில் பயணத்தை எளிதாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரூவன் அசார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த பயணத்தின் போது விவசாயம், நீர் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் ஆலோசிக்க உள்ளதாக நம்பப்படுகிறது.

சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்(S. Jaishankar) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்(Piyush Goyal) இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!