நள்ளிரவிற்கு அருகில் டூம்ஸ்டே கடிகாரம் : அழிவின் விளிம்பில் உலகம்!
2025 ஆம் ஆண்டில் நள்ளிரவிற்கு 89 வினாடிகளில் இருந்த டூம்ஸ்டே கடிகாரம் 2026 ஆம் ஆண்டில் 85 வினாடிகளாக உயர்ந்துள்ளது.
இது உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதை புலப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக அழிவை கணிக்க 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடிகாரம் நள்ளிரவுக்கு அருகில் வருவது இதுவே முதல் முறையாகும்.
“அணு ஆயுதங்கள், காலநிலை மாற்றம் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களால் நாம் எதிர்கொள்ளும் அபாயங்கள் அனைத்தும் வளர்ந்து வருவதை இது சுட்டிக்காட்டுவதாக டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரத்தை அளவிடும் புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸின் (Bulletin of the Atomic Scientists) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்ஸாண்ட்ரா பெல் (Alexandra Bell) தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு நொடியும் முக்கியமானது, மேலும் நமக்கு நேரம் முடிந்து கொண்டிருக்கிறது” எனவும், முக்கிய நாடுகள் இன்னும் ஆக்ரோஷமாகவும், விரோதமாகவும், தேசியவாதமாகவும் மாறிவிட்டன,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





