இலங்கை

முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள்

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட எதிரணிகளிலுள்ள சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்தக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளன.

இந்நடவடிக்கைக்கு பிறகும் எதிரணி கூட்டு தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிசபைத் தேர்தல்களில் எதிரணிகள் இணைந்தே ஆட்சி அமைந்துள்ளன.

எனவே, மாகாணசபைத் தேர்தலில் எதிரணிகள் ஒன்றிணைந்து, முதல்வர் பதவிக்காக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவேட்பாளர்களை களமிறக்கினால் வெற்றி பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

(Visited 2 times, 2 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!