உலகம்

வடமேற்கு பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கையில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் ராணுவ வாகனம்மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 30 பேரைச் சுட்டுக்கொன்றதாக இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி, பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே பாகிஸ்தான் ராணுவ வாகனம் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது, தெஹ்ரிக் -இ-தலிபான் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அதில், ஒன்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இரு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைக்காக பாதுகாப்புப் படையினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரி பாராட்டு தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான வெற்றி அதன் அசைக்க முடியாத உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

(Visited 37 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்