இலங்கை

மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என அறிவிப்பு!

துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ள் ஏற்றுமதியின் போது முறையான பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும்

இந்த வரி கொள்கை முறையாக செயற்படுத்தப்படுகிறது.எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய தகவல்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

மீள் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஏற்றுமதி கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!