ஐரோப்பா

மேற்கத்தேய நாடுகளின் பொருளாதர தடைகளை மீறி ட்ரோன்களை பெறும் முயற்சியில் ரஷ்யா!

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவம் மேற்கத்திய தடைகளை மீறி கஜகஸ்தான் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து ட்ரோன்களைப் பெற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

(OCCRP) மற்றும் Der Spiegel இதழ் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, அஸ்பான் அர்பா என்ற  நிறுவனத்திடம் இருந்து ரஷ்யா 500 ட்ரோன்களை இறக்குமதி செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம், சுரங்கம், கட்டுமானம், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்களை வழங்குவதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையே ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் ரஷ்யா ட்ரோன்களை பெற்று வருகிறது. மேலும் தற்போது நடைபெற்று வருகின்ற போரில் பயன்படுத்த ரஷ்யாவிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போர் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரஷ்யா நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!