பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை புஷ்பலதா. கடந்த 1958-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்தபோது புஷ்பலதாவுக்கும் – ராஜனுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடைசியாக 1999-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ படத்தில் நடித்திருந்தார் புஷ்பலதா. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்