மத்திய பிரதேசத்தில் 72000 தடை செய்யப்பட்ட இருமல் சிரப் பறிமுதல்
கோடீன் அடங்கிய தடை செய்யப்பட்ட இருமல் மருந்தின் 72,000 பாட்டில்களை மத்தியப் பிரதேச காவல்துறை பறிமுதல் செய்து ஒரு நபரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
800 பெட்டிகளில் அடைக்கப்பட்ட கோடீன் அடிப்படையிலான இருமல் சிரப் பாட்டில்கள் சமீபத்தில் சாகர் நகரில் கைப்பற்றப்பட்டதாக இயக்குநர் ஜெனரல் ஜெய்தீப் பிரசாத் தெரிவித்தார்.
ரேவாவில் இருமல் சிரப் விற்கப்படுவதாக போலீசாருக்கு முதலில் தகவல் கிடைத்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சாகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான குடோனில் இருந்து 1.22 கோடி மதிப்புள்ள இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
(Visited 38 times, 1 visits today)





