ஐரோப்பா

ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் முக்கிய உள்கட்டமைப்பு சேதம்: உக்ரைன்

உக்ரேனின் வடகிழக்கு வட்டாரமான சுமியில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) கூறியுள்ளனர்.

முதற்கட்டத் தகவல்களின்படி, தாக்குதல்களில் யாரும் காயமடையவில்லை.அந்த வட்டாரத்துக்கான ராணுவ நிர்வாகம் அதன் டெலிகிராம் பதிவில் இதைத் தெரிவித்தது.

எந்த உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்று அப்பதிவில் குறிப்பிடப்படவில்லை.

இரவு நேரத்தில் ரஷ்யா எட்டு ஆளில்லா வானுர்திகளை அனுப்பியதாகவும் அவற்றில் ஏழு வானூர்திகளை உக்ரேனிய ஆகாயத் பாகாப்புக் கட்டமைப்பு அழித்துவிட்டதாகவும் உக்ரேனிய விமான படை அதன் டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ‘கேஎச்-69’ ஏவுகணை ஒன்றையும் ரஷ்யா பாய்ச்சியதாக அது கூறியது. இருப்பினும் உக்ரேனின் பதில் நடவடிக்கையால் அந்த ஏவுகணை அதன் இலக்கை எட்டவில்லை என்று கூறிய உக்ரேனிய ஆகாயப் படை அதுகுறித்த மேல்விவரங்களை வெளியிடவில்லை.

(Visited 4 times, 1 visits today)
See also  பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி : நம்பிக்கையில் பாதையில் பயணிப்பதாக தகவல்!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content