செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரே நாளில் பிறந்த தாயும் குழந்தையும்

அமெரிக்காவில் லீப் ஆண்டில் பிப்ரவரி 29ஆம் திகதியன்று தாய்க்கும் சேய்யும் பிறந்நாள் கொண்டாடவுள்ள சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நார்த் கரோலைனாவைச் சேர்ந்த டாக்டர் காய் சுன்னுக்கும் அவரது மகளுக்கும் ஒரே பிறந்தநாள் கொண்டாடவுள்ளனர்.

அதில் சுவாரசியம் என்னவெனில் இருவரும் லீப் ஆண்டில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று பிறந்தவர்கள். 40 வயது காய் சுன்னுக்கு இந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளது

அவரது மகளுக்கு குலோயி (Chloe) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“என்னைப் போலவே எனது மகளும் லீப் நாளில் பிறந்தால் நன்றாக இருக்குமென நானும் எனது கணவரும் பேசியிருந்தோம். நினைத்தது போலவே எங்கள் அன்பு மகள் பிப்ரவரி 29ஆம் திகதி பிறந்துவிட்டாள்!”என காய் சுன் மகிச்சியுடன் தெரிவித்தார்.

பிப்ரவரி 26ஆம் தேதி பிறக்கவேண்டிய குலோயி 3 நாள்கள் கழித்து பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்திருக்கிறார்.

இந்நிலையில் தாயும் சேயும் ஆரோக்கியமாய் இருப்பதாக கூறப்படுகின்ற அதேவேளை காய் சுன்னுக்கும் அவரது கணவர் மைக்கலுக்கும் (Michael) மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!