ஈரான் போர்க்கப்பல்மீது தாக்குதல்: 84 சடலங்கள் மீட்பு!
இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் போர்க் கப்பலில் இருந்தாகக் கூறப்படும் 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு சடலங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலொன்றே இந்து சமுத்திரத்தில் வைத்து தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேற்படி கப்பலில் இருந்து 32 பேரை இலங்கை உயிருடன் மீட்டது. காயமடைந்தவர்கள் இலங்கையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.





