ஐரோப்பா

ரஷ்யாவின் பெல்கோர்ட் பகுதியில் இருந்து 4000 பேர் வெளியேற்றம்!

ரஷ்யாவின் பெல்கோர்ட்  எல்லைப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள்  தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெல்கோரோடில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 600 குழந்தைகள் உள்ளதாக ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் பெல்கோர்ட்  பகுதியில், ரஷ்ய சுதந்திர போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, உக்ரைன் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்