உலகம்

விண்வெளிக்குச் சென்ற 4 எலிகள் பூமிக்குத் திரும்பின – உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்

விண்வெளி ஆய்வுக்காகச் சென்ற சீன விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்ட 4 எலிகள் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளன.

பூமிக்குத் திரும்பப் பயன்படுத்தப்பட்ட விண்கலத்துக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எலிகள் விண்வெளியில் எலிகள் தங்க நேரிட்டது.

இந்த எலிகள் பூமிக்குத் திரும்பிய உடனேயே, அவற்றின் நடத்தை மற்றும் உடலியல் ஆய்வுகளுக்காக ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

விண்வெளியில் இருந்தபோது எலிகள் குறைவான உணவை உட்கொண்டுள்ளன. ஆனால் அதிகமாகத் தண்ணீர் அருந்தியுள்ளன. இது தொடர்பான முதற்கட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்ததாகச் சீன மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

எடைக்குறைவு மற்றும் குறுகிய விண்வெளிகள் சிறு பாலூட்டிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விண்வெளியில் இந்த எலிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டதாக ஆய்வாளர் ஒருவர் கூறினார். குறைவான புவியீர்ப்புச் சூழலுக்கும் ஏற்றபடி அவை மிகக் குறுகிய காலத்தில் மாறிக் கொண்டதாகவும் ஆய்வாளர் தெரிவித்தார்.

இந்த எலிகள் பூமிக்குத் திரும்பவிருந்த Shenzhou-20 விண்கலத்தின் சன்னலில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதன் காரணமாகவே அவற்றின் திரும்புதல் தாமதம் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!