ஈரான் நடத்திய தாக்குதலில் பஹ்ரைனில் 32 பேர் காயம்!
தமது நாடுமீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று பஹ்ரைன் Bahrain தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
மத்திய கிழக்கில் 10 ஆவது நாளாக போர் தொடரும் நிலையில், ஈரான்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உக்கித் தாக்குதலை நடத்திவருகின்றன.
மறுபுறத்தில் கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முறியடித்துள்ளன.
குறிப்பாக சவுதி அரேபியாவின் ஷய்பா எண்ணெய் வயலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.





