தமிழ்நாடு

3 அடி உயரம் ,250 கிலோவில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்!

நடிகர் ரஜினிகாந்திற்கு மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் சிலை அமைத்து குடும்பமே வழிபடும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறை நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சிலை அமைத்து ரசிகர்கள் வழிபாடு செய்வது புதிதல்ல. நடிகைகள் குஷ்பு, சமந்தா, நிதி அகர்வால் சமீபத்தில் இறந்துபோன ‘எதிர்நீச்சல்’ புகழ் மாரிமுத்து ஆகியோருக்கு ரசிகர்கள் சிலை அமைத்தனர். அந்த வரிசையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கார்த்திக் என்பவர் ரஜினிக்கு சிலை அமைத்துள்ள செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 3 அடி உயரத்தில் 250 கிலோ எடையில் இவர் கற்சிலை அமைத்து தன் வீட்டிலேயே கோயில் போன்ற அறையை மாற்றியுள்ளார்.

ரஜினிக்கு சிலை

ரஜினிகாந்தின் சிலைக்கு கீழ் தனது தாய், தந்தையர் புகைப்படத்தையும் விநாயகர் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார் கார்த்திக். மேலும், நாள்தோறும் ரஜினி சிலைக்கு பாலாபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகிறாராம். பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 6 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். தனக்கு உறுதுணையாக பெற்றோரும், மனைவியும் இருப்பதாகவும் பேட்டிகளில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பே, அவர் ரஜினியின் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்து வந்த நிலையில் தற்போது ரஜினிக்கு கற்சிலை அமைத்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!