இந்தியா செய்தி

ஆந்திராவில் சமோசா சாப்பிட்ட 3 குழந்தைகள் மரணம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லத்தில் உணவு விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

கோடௌரட்லா மண்டலுக்கு உட்பட்ட கைலாசா நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ‘சமோசா’ சாப்பிட்ட 27 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் 3 குழந்தைகள் அனகாப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

குழந்தைகள் முதலாம் வகுப்பு படிக்கும் ஜோசுவா மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் பவானி மற்றும் ஷ்ரத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 24 பேர் நர்சிபட்டினம் மற்றும் அனகப்பள்ளியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 7 பேர் நர்சிபட்டினம் பகுதி மருத்துவமனையிலும், 17 பேர் அனகப்பள்ளி பகுதி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு (கேஜிஹெச்) மாற்றப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அனாதை இல்லம் ஒரு NGO மூலம் நடத்தப்படுகிறது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 60 குழந்தைகள் படிக்கின்றனர்.

அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் கே.விஜயா, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

(Visited 19 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!