உலகம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினரின் அட்டகாசம் – 25 தொழிலாளர்கள் படுகொலை!

  • January 31, 2026
  • 0 Comments

வடகிழக்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய போராளிக்குழுவினர் நடத்திய கொடிய  தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். போர்னோ (Borno) மாநிலத்தின் சபோன் காரி (Sabon Gari ) நகரில் பதுங்கியிருந்த துப்பாக்கிதாரிகள் 25 கட்டுமானத் தொழிலாளர்களைக் கொன்றதாக அவ் மாநிலத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்த நைஜீரியாவில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலும் மறுப்பதாக AP  இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இன்றைய […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் நில அதிர்வு!

  • January 31, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை Trincomalee மாவட்டத்திலுள்ள ரொட்டவெவ Rotawewa மற்றும் கோமரங்கடவல Komarangadawala ஆகிய பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 மணிக்கும் 3.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் திருகோணமலை , கண்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு அளவிலான நில அதிர்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன.

இந்தியா

கட்சி தாவல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சசி தரூர் எம்.பி.!

  • January 31, 2026
  • 0 Comments

காங்கிரஸிலிருந்து Congress வெளியேறி பா.ஜ.கவுடன் BJP சங்கமிக்கவுள்ளார் என வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் Shashi Tharoor. “ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்.” என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பங்கேற்றிருந்தார். இதன்போது பா.ஜ.கவில் இணைவது பற்றி ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் […]

இலங்கை செய்தி

பெப்ரவரி 04 தமிழரின் கறுப்பு தினம்- வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம்

  • January 31, 2026
  • 0 Comments

எதிர்வரும் 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் தெரிவித்துள்ளார்.. வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக இந்த போராட்டமானது வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு […]

பொழுதுபோக்கு

சினிமாவில் மாயமான ஹ்ருதிஹாசன் மீண்டும் களத்தில்!

  • January 31, 2026
  • 0 Comments

நடிகை ஸ்ருதிஹாசன் Shruti Haasan ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கியவர். கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்து இளைஞர்களின் இதயங்களை ஆக்கிரமித்தவர். எனினும், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரது காட்டில் மழையே இல்லை. தமிழ் சினிமா உலகில் இருந்து காணாமல்போனவராகக் கருதப்பட்டார். தற்போது மீண்டும் களத்துக்கு வந்துள்ளார். எனினும், நடிகை ஸ்ருதிஹாசன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் தற்போத நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ் உள்ளிட்ட 5 […]

உலகம்

03 மில்லியனுக்கும் அதிகமான எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட தயாராகும் அமெரிக்க நீதித்துறை!

  • January 31, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள்,  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  இன்று வெளியிடுவதாக  அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. 2000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் 180,000 படங்கள் சமீபத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் எப்ஸ்டீன் (Epstein) சிறையில் இருந்தபோது அவர் பற்றிய உளவியல் அறிக்கைகள் மற்றும் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor) என்று கருதப்படும் தி இன்விசிபிள் மேனுக்கு ( Invisible Man) அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களும் அடங்கும். அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் […]

உலகம்

மத்திய கிழக்கில் போர் சூழல் ஏற்படுமா? – சகாக்களுக்கு ஆயுத விற்பனையில் ஈடுபடும் அமெரிக்கா!

  • January 31, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் பலவீனமான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேலுக்கு 30 அப்பாச்சி (Apache) தாக்குதல் ஹெலிகாப்டர்களை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டு இலகுரக தந்திரோபாய வாகனங்களை 1.8 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது, மேலும் இஸ்ரேல் […]

ஐரோப்பா

ஒரு பக்கம் போர், மறுபக்கம் குளிர் : தவிக்கும் உக்ரைன் மக்கள்!

  • January 31, 2026
  • 0 Comments

உக்ரைனின் பல பகுதிகளில் வெப்பநிலையானது -20 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ள நிலையில் மக்கள் குளிரில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் மின்சாரக் கட்டமைப்பை சீர்குலைத்துள்ள நிலையில், உக்ரைன் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் குறைவடைந்துள்ள வெப்பநிலையை சமாளிக்க போராடி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொடூரமான குளிர்” காலத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு நிறுத்த விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக […]

உலகம்

பொதுமன்னிப்பு சட்டமூலத்தை அறிவித்த வெனிசுலா – பல கைதிகள் விடுதலையாக வாய்ப்பு!

  • January 31, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodríguez) நேற்று  பொதுமன்னிப்பு சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி நீண்ட காலமாகக் கோரி வந்த நிலையில் தற்போது சாத்தியமாகியுள்ளது. “இந்தச் சட்டம் அரசியல் மோதலால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த உதவும்” என்று டெல்சி ரோட்ரிக்ஸ் […]

இந்தியா

தெலுங்கானா அரசின் அலட்சியப் போக்கு – 20 குழந்தைகள் வைத்தியசாலையில்!

  • January 31, 2026
  • 0 Comments

தெலுங்கானா மாநிலத்தில் பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 20 மாணவர்கள் சுகவீனம் அடைந்துள்ளனர்.  குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. வயிற்று வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டதை தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சங்கரெட்டி  (Sangareddy) மாவட்டம்,  வெங்கடாபூர் (Venkatapur)  கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியிலேயே இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. உள்ளுர் விழாவொன்றில் சமைக்கப்பட்ட உணவை சூடாக்கி மாணவர்களுக்கு வழங்கியதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் […]

error: Content is protected !!