உலகம் முக்கிய செய்திகள்

நிபந்தனை காலம் முடிந்தது : ஈரான் மீது தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!

  • January 28, 2026
  • 0 Comments

ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முந்தைய தாக்குதல்களை விட “மிக மோசமானதாக” இருக்கும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். மத்திய கிழக்கு கடற்பகுதியில் ஆப்ரகாம் லிங்கன் போர் கப்பலை நிலைநிறுத்தியுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் வெனிசுலாவுடனான முந்தைய சூழ்நிலைக்கு இணையாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானில் பொருளாதார மந்த நிலையால் வெடித்த பரவலான போராட்டங்களில் […]

#IdhayamMurali #AtharvaaMurali #ThamanS #ThangameThangame #NewSongRelease #TamilCinema #MelodyKing #IdhayamMuraliUpdate #CinemaNews புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இதயம் முரளி: ‘தங்கமே தங்கமே’ பாடல் அவுட்!

  • January 28, 2026
  • 0 Comments

மறைந்த பழம்பெரும் நடிகர் முரளியின் நினைவாகவும், அவரது கிளாசிக் படமான ‘இதயம்’ படத்தின் தாக்கத்தோடு உருவாகி வரும் திரைப்படம் ‘இதயம் முரளி’. என பெயரிட்டு அது மட்டுமல்லாது நடிகர் அதர்வா முரளி நடிப்பாத்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது தற்போது இப்படத்திலிருந்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் மெலோடி பாடலான ‘இதயா’ ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் “தங்கமே தங்கமே” இன்று (ஜனவரி 28, 2026) வெளியாகியுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் ஒன்றிணைவால் அச்சத்தில் அரசு!

  • January 28, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியும் UNP, ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார t Ranjith Madduma Bandara தெரிவித்தார். இந்த இணைவானது அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயல்பட இரு தரப்பினரும் இணக்கத்துக்கு வந்துள்ளனர். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எமது பலம் தெரியவரும்.” […]

இலங்கை

இரவு நேர கொள்கை விகிதத்தை 7.75% விகிதத்தில் பராமரிக்க முடிவு! மத்திய வங்கி அறிவிப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி அதன் சமீபத்திய நாணயக் கொள்கை வாரியக் கூட்டத்தைத் தொடர்ந்து, இரவு நேர கொள்கை விகிதத்தை (OPR) 7.75% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளது. வளர்ந்து வரும் முன்னேற்றங்கள், உள்நாட்டு முன்னணி மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு நாணயக் கொள்கை வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக  CBSL குறிப்பிட்டுள்ளது. தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5% என்ற இலக்கை நோக்கி நகர்த்துவதை ஆதரிக்கும் என்று வாரியம் கருதுகிறது. […]

உலகம்

அமெரிக்காவில் ICE முகவர்களை குறைக்க ட்ரம்ப் உறுதி!

  • January 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் – மினசோட்டாவில் கூட்டாட்சி குடியேற்றப் படைகளின் “விரிவாக்கத்தைக் குறைப்பதாக” ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். குடியேற்ற முகவர்களால் இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் எதிர்பலைகள் உருவாகின. இந்நிலையில், ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இந்த நடவடிக்கை தனது அரசியல் தளத்தினரிடையே ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பின்வாங்கல் அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமுடன் (Kristi Noem) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

பொழுதுபோக்கு

ரவுடி அண்ட் கோ, சித்தார்த் புதிய படம், Rowdy and Co First Look, Siddharth Yogi Babu Movie.

  • January 28, 2026
  • 0 Comments

நடிகர் சித்தார்த் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதல்முறையாக கதையின் நாயகர்களாக இணைந்து நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ (Rowdy & Co) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முற்றிலும் வித்தியாசமான ‘அப்சர்ட் ஹ்யூமர்’ (Absurd Humor) பாணியில் உருவாகியுள்ள இந்த போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘டக்கர்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் மற்றும் நடிகர் சித்தார்த் இரண்டாவது முறையாக […]

உலகம்

நிபா வைரஸ் பரவல் – 1700 பேரை பரிசோதனைக்கு உட்படுத்திய தாய்லாந்து!

  • January 28, 2026
  • 0 Comments

நிபா வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு   1,700 விமானப் பயணிகளைப்  தாய்லாந்து அரசாங்கம் பரிசோனை செய்துள்ளது. அதன்படி, இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து பயணம் மேற்கொண்ட 1,700 விமானப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுகளில் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தை போலவே இந்தோனேசியா,  மியான்மர், வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் சுகாதார பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளன. இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]

#GandhiTalks #VijaySethupathi #ArvindSwami #ARRahman #SilentFilm #TamilCinema #GandhiTalksTrailer #MakkalSelvan #TrendingNews #CinemaUpdate பொழுதுபோக்கு

மௌனத்தால் அதிரும் திரை! விஜய் சேதுபதி – அரவிந்த் சாமியின் ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர்!

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘காந்தி டோக்ஸ்’ (Gandhi Talks) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று (ஜனவரி 27) வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள இந்தப் படம், வசனங்களே இல்லாத ஒரு ‘ப்ளாக் கொமடி’ (Black Comedy) மௌனப் படமாக உருவாகியுள்ளது. நேற்று வெளியான சுமார் 2 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர், படத்தில் இருக்கும் இரண்டு மாறுபட்ட மனிதர்களின் உலகத்தைக் காட்டுகிறது. ஏழ்மையின் […]

இலங்கை

ரணில் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீர்மானம்!

  • January 28, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், மார்ச் மாதத்தில் முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்று  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த சமர்ப்பணத்தை முன்வைத்தார். தொடர்புடைய செய்தி நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

ஐரோப்பா

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – 05 பேர் உயிரிழப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

உக்ரேனிய பயணிகள் ரயில் மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயிலில் 200இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில்,  05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) குற்றம் சாட்டியுள்ளார். போரை நிறுத்துவதற்காக அபுதாபியில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்டுபடுத்தும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

error: Content is protected !!