இலங்கை செய்தி

முல்லைத்தீவில் 41 வயது நபர் ஒருவர் அடித்து கொலை

  • January 28, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு(Mullaitivu) ஒட்டுசுட்டான்(Ottusuddan) பிரதேசத்தின் கரடிப்புலவு(Karadipulavu) கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த 41 வயது நபர், கடைக்கு சென்று உணவு வாங்கி வந்து கொண்டிருந்த வேளையில் அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபரின் உடல் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

அமெரிக்க பயிற்சி பெற்ற இலங்கையின் முதல் கடற்படை அதிகாரி மரணம்

  • January 28, 2026
  • 0 Comments

அமெரிக்க கடற்படை சீல்(SEAL) பயிற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் இலங்கையர் என்ற பெருமை சேர்த்த படைப்பிரிவு அதிகாரி கோயன் சமிதா(Koyan Chamitha) காலமானார். 28 வயதான படைப்பிரிவு அதிகாரி கோயன் சமித, வெலிசரா(Welisara) கடற்படை முகாமில் உள்ள கடற்படை குடியிருப்புக்குள் இறந்து கிடந்துள்ளார். கம்பஹாவைச்(Gampaha) சேர்ந்தவரும் பண்டாரநாயக்க(Bandaranaike) கல்லூரியின் முன்னாள் மாணவருமான சமித, கலிபோர்னியாவில்(California) கடுமையான பயிற்சிக்குப் பிறகு மதிப்புமிக்க சீல் ட்ரைடென்ட் விருதைப் பெற்று 2025ம் ஆண்டில் சர்வதேச சிறப்பைப் பெற்றார். இலங்கை கடற்படையின் சிறப்பு […]

இந்தியா செய்தி

நேபாள போராட்டத்தின் போது தப்பி ஓடிய போதைப்பொருள் கடத்தல்காரர் குஜராத்தில் கைது

  • January 28, 2026
  • 0 Comments

உள்நாட்டு போராட்டங்களின் போது நேபாள(Nepal) சிறையில் இருந்து தப்பிச் சென்ற சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் குஜராத்தில்(Gujarat) கைது செய்யப்பட்டுள்ளார். ககடாபித்(Kakatapit) பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தலை மறைவாக இருந்த நிலையில் தர்மேஷ் ராசிக்லால் சுனாரா(Dharmesh Rasiklal Sunara) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டு(Kathmandu) விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள 13 கிலோ கலப்பின கஞ்சாவை கடத்த முயன்றபோது தர்மேஷ் சுனாரா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்கு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

Ukவில் வேலைகளை பெற போலியான ஆவணங்களை தயாரிக்கும் மோசடியாளர்கள் – ஏமாறும் மக்கள்!

  • January 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு வேலைகளை பெற்றுத்தருவதாக கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் உள்துறை அலுவலகம் விசாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி டைம்ஸ் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து உள்துறை அலுவலகம் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகளில் தவறான வேலைப் பதிவுகளை வழங்கும் ‘விசா முகவர்கள்’ இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இல்லாத வேலைவாய்ப்புக்கான ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்களைப் பெறுவதற்காக, CVகள் மற்றும் வங்கி பதிவுகள் உட்பட போலியான ஆவணங்களுக்கு புலம்பெயர்ந்தோர் £13,000 வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. […]

உலகம் செய்தி

அடுத்த மாதம் இஸ்ரேல் செல்ல உள்ள இந்திய பிரதமர் மோடி

  • January 28, 2026
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையே வேகமாக விரிவடைந்து வரும் மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) பிப்ரவரியில் இஸ்ரேலுக்கு(Israel) விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார்(Reuven Azar) தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருகை தருமாறு முறையாக அழைத்துள்ளதாகவும் விரைவில் பயணத்தை எளிதாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரூவன் அசார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த பயணத்தின் போது விவசாயம், நீர் தொழில்நுட்பம் மற்றும் […]

உலகம்

ஈரானில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகும் கைதிகள் : பலி எண்ணிக்கை 20000 கடந்திருக்கலாம்!

  • January 28, 2026
  • 0 Comments

ஈரானில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகுவதாக அங்கிருந்து வெளிவரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் தெஹ்ரான் (Tehran) போன்ற நகரங்களில் இந்த வழக்குகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த போராட்டக்காரர்களைக் கைது செய்ய பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைகளில் புகுந்து வருவதாகவும், முன்னாள் கைதிகள் கடுமையான அடிதடி மற்றும் போலி மரணதண்டனைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு போராளிகள், குறிப்பாக […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – இந்திய அணிக்கு 216 ஓட்டங்கள் இலக்கு

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில், டெவோன் கோன்வே(Glenn Phillips) 44 ஓட்டங்களும் […]

உலகம் முக்கிய செய்திகள்

நள்ளிரவிற்கு அருகில் டூம்ஸ்டே கடிகாரம் : அழிவின் விளிம்பில் உலகம்!

  • January 28, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் நள்ளிரவிற்கு 89 வினாடிகளில் இருந்த டூம்ஸ்டே கடிகாரம் 2026 ஆம் ஆண்டில் 85 வினாடிகளாக உயர்ந்துள்ளது. இது உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதை புலப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக அழிவை கணிக்க 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடிகாரம் நள்ளிரவுக்கு அருகில் வருவது இதுவே முதல் முறையாகும். “அணு ஆயுதங்கள், காலநிலை மாற்றம் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களால் நாம் எதிர்கொள்ளும் அபாயங்கள் அனைத்தும் வளர்ந்து வருவதை இது சுட்டிக்காட்டுவதாக டூம்ஸ்டே கடிகாரத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

“வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில்” -ஆதரவாக முன்னாள் எம்.பிக்கள் களத்தில்!

  • January 28, 2026
  • 0 Comments

“ பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe . அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர Mahinda Amaraweera தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலையானார். அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், […]

இந்தியா

விமான விபத்து குறித்து சந்தேகம்: விசாரணை கோருகிறார் மம்தா பானர்ஜி!

  • January 28, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் Ajit Pawar பயணித்த விமானம் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பில் அரசியல் களத்தில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மேற்படி விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி Mamata Banerjee சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று காலை 8.45 மணி அளவில் விமான […]

error: Content is protected !!