உலகம் செய்தி

நர்கஸ் முகமதியை ( Narges Mohammadi) விடுவிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்!

  • December 22, 2025
  • 0 Comments

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) மற்றும் பிறரை ஈரானிய பாதுகாப்புப் படையினர் “வன்முறையாகக் கைது செய்ததை” கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல், சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமதி, வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவு விழாவில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டார். 1989 முதல் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவராக பணியாற்றி வரும் அயத்துல்லா அலி கமெனியின்  (Ayatollah Ali […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

  • December 22, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தவேளை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேற்படி ஒப்பந்தங்களுக்குள் சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தமும் உள்ளது. இவற்றை வெளிப்படுத்துமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

அமெரிக்காவின் புதிய விசா கொள்கை- இந்திய தொழில்நுட்ப பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், இந்திய தொழில்நுட்ப பணியாளர்களின் வாழ்க்கையை எதிர்பாராத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் விடுமுறையை பயன்படுத்தி விசா புதுப்பித்து பணிக்கு திரும்பும் நடைமுறை, இந்த ஆண்டு ஆயிரக்கணக்கானோருக்கு கவலை மற்றும் குழப்பமாக மாறியுள்ளது. அமெரிக்க தூதரகங்களின் திடீர் முடிவுகள், இந்தியாவில் சிக்கியுள்ள தொழில்நுட்ப பணியாளர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் பல இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள், டிசம்பர் விடுமுறை காலத்தில் இந்தியா சென்று விசாவை புதுப்பித்து […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐஎஸ் அமைப்பின் பின்னணியில் தந்தை, மகன் நடத்திய கோரத் தாண்டவம் – புதிய தகவல்கள் வெளியீடு

  • December 22, 2025
  • 0 Comments

சிட்னி Bondi Beach தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ‘டென்னிஸ் பந்து குண்டுகள்’ மற்றும் பைப் குண்டுகளைப் பயன்படுத்தியதாகப் புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 15 பேரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவீத் அக்ரம், சிகிச்சைக்குப் பின் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு முன்னதாகத் தந்தை மற்றும் மகன் இருவரும் ஐஎஸ் (IS) அமைப்பின் கொடியுடன் வீடியோ வெளியிட்டதும், பல மாதங்களாகத் துப்பாக்கிப் பயிற்சி பெற்று தாக்குதலைத் திட்டமிட்டதும் பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலுக்கு இரண்டு […]

உலகம் செய்தி

வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடரும் அமெரிக்கா – அதிகரித்த எண்ணெய் விலை!

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்கா வெனிசுலா நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை கைப்பற்றிய பிறகு இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. புதிய நிலவரங்களின் படி கச்சா எண்ணெய் 34 சென்ட்கள் அல்லது 0.6% உயர்ந்து பீப்பாய்க்கு $56.86 ஆக பதிவாகியுள்ளது. வெனிசுலாவிற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  அமெரிக்கா வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா எண்ணெய் விநியோகத்தின் மூலம் ஈட்டும் வருமானத்தை போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – 15 பேர் பலி!

  • December 22, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 34 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் (Yogyakarta) சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

ஐரோப்பா செய்தி

30 போர் விமானங்கள், 2,000 மாலுமிகளை ஏற்றிச் செல்லும் கப்பலை கட்டும் பிரான்ஸ்!

  • December 22, 2025
  • 0 Comments

30 போர் விமானங்கள் மற்றும் 2,000 மாலுமிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஒரு புதிய விமானம் தாங்கிக் கப்பலை கட்டவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) நேற்று அறிவித்துள்ளார். சர்வதேச  கடற்பரப்புகளில் சுதந்திரமாக செயல்படவும், காலத்தின் தேவைக் கருதியும் இந்த கப்பல் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வேட்டையாடும் விலங்குகளின் யுகத்தில், பயப்படுவதற்கு நாம் வலுவாக இருக்க வேண்டும், குறிப்பாக கடலில் வலுவாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், கடந்த இரண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

2033 வரை அவகாசம் வேண்டும்: ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தில் மாற்றம் கோருகிறார் சஜித்!

  • December 22, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மாவனல்லை, அரநாயக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், அப்போதைய அரசாங்கம் 2028 முதல் கடன் மீள செலுத்தப்படும் என […]

உலகம்

புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு ஆலையை மீண்டும் திறக்கும் ஜப்பான் -முடிவு இன்று!

  • December 22, 2025
  • 0 Comments

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற புகுஷிமா (Fukushima) பேரழிவிற்குப் பிறகு ஜப்பான்  தனது அணுமின் நிலையத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. அதற்கமைய  உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆலையில் உள்ள ஏழு உலைகளில் முதலாவது உலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து […]

error: Content is protected !!