கொழும்பு மாநகர சபையில் அரசியல் டீல்: மனசாட்சி எங்கே?
அரசியல் “டீல்” மூலமே கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் குற்றஞ்சாட்டினார். அன்று மனசாட்சி குறித்து பேசிய மேயர், இன்று கண்ணாடி முன் சென்று தனது மனசாட்சி குறித்து வினவவேண்டும் எனவும் அவர் கூறினார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரிசா சாருக் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவினரை […]













