அரசியல் செய்தி

கொழும்பு மாநகர சபையில் அரசியல் டீல்: மனசாட்சி எங்கே?

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் “டீல்” மூலமே கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் குற்றஞ்சாட்டினார். அன்று மனசாட்சி குறித்து பேசிய மேயர், இன்று கண்ணாடி முன் சென்று தனது மனசாட்சி குறித்து வினவவேண்டும் எனவும் அவர் கூறினார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரிசா சாருக் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவினரை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் உலகம் ஐரோப்பா செய்தி

பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு ‘சேர்’ பட்டம்: பிரிட்டன் மன்னரின் உயரிய கௌரவம்

  • December 31, 2025
  • 0 Comments

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2026-ஆம் ஆண்டிற்கான பிரித்தானிய மன்னரின் உயரிய ‘நைட்’ (Knight Bachelor) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உயர்கல்வித் துறையில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கக் கொள்கைகளை (Inclusion) முன்னெடுத்தமைக்காக இந்த ‘சேர்’ பட்டத்தைப் பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டு லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராகப் பொறுப்பேற்ற இவர், 69 சதவீத சிறுபான்மை இன மாணவர்களைக் […]

உலகம்

கலிபோர்னியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் உயிரிழப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட் பால்டியில்  ( Mount Baldy)  இருந்து 03 மலையேற்ற வீரர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 19 வயதான இளைஞர் ஒருவர் 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதகமான வானிலை மீட்பு நடவடிக்கையில் சவாலாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் மிகவும் ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக அறியப்படும் மவுண்ட் பால்டி, சம்பவம் நடந்த நேரத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

மண்டியிட்டது கூட்டு எதிரணி: வென்று காட்டியது என்பிபி!

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (31) நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதீடுமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 2 வாக்குகளால் பாதீடு நிறைவேறியது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

போண்டி கடற்கரை நாயகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

  • December 31, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை தாக்குதலின் போது துப்பாக்கிதாரியைத் தடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, காயங்கள் தீவிரமடைந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 14 தாக்குதலில் மார்பு மற்றும் கையில் காயமடைந்த இவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “மற்றொரு மனிதன் இறப்பதைத் தடுப்பதே எனது குறிக்கோள், நான் மரணத்திற்கு அஞ்சவில்லை” என அகமது உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 1996-ஆம் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் மென்மையான பிளாஸ்டிக் மறுசுழற்சி மீண்டும் தொடக்கம்

  • December 31, 2025
  • 0 Comments

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் மீண்டும் தொடங்கியுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் தாரியில் உள்ள ஐக்யூரினுவ் (iQRenew) ஆலையில், தேங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான டன் பிளாஸ்டிக்குகள் தற்போது சுத்திகரிக்கப்படுகின்றன. அதிநவீன இயந்திரங்கள் மூலம் இவை சிறு துகள்களாக்கப்பட்டு, பாட்டில்கள் மற்றும் வாளிகளாக மாற்றப்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக்கை மீண்டும் எண்ணெயாக மாற்றும் புதிய வேதியியல் முறையும் இங்கு சோதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் உற்பத்திச் செலவு சற்று அதிகம் என்றாலும், சுற்றுச்சூழலைக் காக்க […]

ஐரோப்பா

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள Eurostar ரயில் சேவை!

  • December 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில், ஆங்கிலக் கால்வாய்(English Channel) கீழ் அமைந்துள்ள சேனல் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் தங்கள் பயணங்களை தொடங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று Eurostar இன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் பயண தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இறுதி நிமிடங்களில் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாம் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “பயணிகள் ரயிலின் நிலை குறித்த […]

உலகம்

போர் நிறுத்தத்தின் எதிரொலி – தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கம்போடிய வீரர்கள் விடுதலை!

  • December 31, 2025
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாய்லாந்து இராணுவம் 18 கம்போடிய வீரர்களை இன்று விடுவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடிய நாடுகளுக்கு இடையே கடந்த 20 நாட்களாக இடம்பெற்ற மோதல் நிலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மோதல் நிலைமை காரணமாக குறைந்தது 101 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரு தரப்பிலும் அரை மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாய்லாந்து இராணுவத்தின் காவலில் இருந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் […]

ஐரோப்பா

புத்தாண்டு தினத்தில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் பிரித்தானிய தொழிலாளர்கள்!

  • December 31, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பாதுகாப்பை வழங்கும் சுமார் 300 பொது காவலர்கள்,  (PCS) தொழிற்சங்க உறுப்பினர்கள், இந்த ஆண்டு நான்காவது முறையாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறக்கவுள்ள புத்தாண்டு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பெரும் சவால்களை கொண்டுள்ளது. அதில் பிரதானமானது ஊழியர்களின் ஊதிய உயர்வு. நாளைய தினம் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். PCS பொதுச் செயலாளர் ஃபிரான் ஹீத்கோட், வேலைநாட்கள் குறைக்கப்பட்டமை மற்றும் குறைந்த ஊதியம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தொழிற்கட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

காலி மாநகர சபைக்குள் அடாவடி: ஐந்து அரசியல் வாதிகள் கைது!

  • December 31, 2025
  • 0 Comments

காலி மாநகரசபை அமர்வின்போது அடாவடியில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எதிரணி உறுப்பினர்கள் ஐவர், பொலிஸாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சபைக்குள் குழப்பம் விளைவித்து, மாநகர சபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசி தாக்குதல் நடத்தி அநாகரீகமாக நடந்துகொண்ட ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவர்களை சட்ட நடவடிக்கையின் நிமித்தம் காலி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!