உலகம்

ஆஸ்திரேலியாவின் சிறிய தீவை கடந்துச் செல்லும் சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

  • December 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிறிய தீவுப் பகுதியை இன்று வெப்ப மண்டல சூறாவளி கடக்கவுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோகோஸ் (கீலிங்) தீவுகளுக்கு (Cocos) சூறாவளி கண்காணிப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும், இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி சூறாவளி கரையை கடக்கும்போது மணிக்கு  100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தீவில் ஏறக்குறைய 600 பேர் வசித்து வருகின்ற […]

உலகம்

ஜப்பானில் இலங்கை பிரஜையின் விபரீதச் செயல் – சுற்றி வளைத்த காவல்துறையினர்!

  • December 25, 2025
  • 0 Comments

ஜப்பானில் நபர் ஒருவர்  கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலைக்கு முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்  டிசம்பர் 22 ஆம் திகதி டோக்கியோவின் யோஷினோயா (Yoshinoya)  உணவகத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேற்படி இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் வெளியிடப்படாத  குறித்த நபரின் கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையின் குறிப்பிட்டுள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

தேரரின் பேஸ்புக் வீடியோவால் கடுப்பில் அர்ச்சுனா!

  • December 25, 2025
  • 0 Comments

தையிட்டி விகாரை தொடர்பில் நாகதீப விகாரையின் விகாராதிபதி வெளியிட்டுள்ள கூற்று சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கோவில், விகாரை என்பவற்றை உடைத்து அரசியல் நடத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும், தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என்று நாகதீப விகாரையின் விகாராதிபதி கூறுகின்றார். முகநூல் நேரலை ஊடாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்தாமல், நாட்டை […]

உலகம் செய்தி

பதுங்கு குழிகளிலிருந்து மீளும் நம்பிக்கை; பெத்லகேமில் பாரம்பரிய ஊர்வலம் மீண்டும் ஆரம்பம்

  • December 25, 2025
  • 0 Comments

காஸா பகுதியில் நிலவும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாகத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக போரினால் முடக்கப்பட்டிருந்த கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பாரம்பரிய ஊர்வலங்களுடன் களைகட்டியுள்ளன. ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் (Bethlehem) நோக்கிய இந்தப் பாரம்பரிய ஊர்வலத்தை கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிசாபல்லா (Cardinal Pierbattista Pizzaballa) தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். சமீபத்தில் காஸாவிற்கு விஜயம் செய்திருந்த […]

இலங்கை செய்தி

இலங்கையை மீட்டெழுக்க அனைத்து இனங்களும் ஒன்றுபடவேண்டிய தருணம் இது!

  • December 25, 2025
  • 0 Comments

“இலங்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்திருக்கின்றோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தி வருமாறு, “டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் […]

இலங்கை செய்தி

சவால்களை வென்று மீண்டெழுவோம்: ஜனாதிபதி அழைப்பு!

  • December 25, 2025
  • 0 Comments

“யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்தார். நத்தார் பண்டிகை வாழ்த்து (Christmas greetings) செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து செய்தி வருமாறு, “உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான […]

இந்தியா செய்தி

தமிழ்நாட்டில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

  • December 24, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டில்(Tamil Nadu) ஒரு அரசு பேருந்து எதிர் திசையில் வந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சிராப்பள்ளியிலிருந்து(Tiruchirappalli) சென்னை(Chennai) நோக்கி சென்ற அரசுப் பேருந்து டயர் வெடித்ததால் நிலை மாறி எதிர் திசையில் வந்த இரண்டு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இதனால் 2 தனியார் வாகனங்களில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சிலர் […]

உலகம் செய்தி

அறுவை சிகிச்சைக்காக விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ

  • December 24, 2025
  • 0 Comments

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக சிறையில் உள்ள பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ(Jair Bolsonaro) அறுவை சிகிச்சைக்காக தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளது ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது. காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ்(Alexandre de Moraes) கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். மேலும், ஜெய்ர் […]

உலகம் செய்தி

கனடாவில் 30 வயது இந்திய பெண் கொலை – காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

  • December 24, 2025
  • 0 Comments

கனடாவின்(Canada) டொராண்டோவில்(Toronto) இந்தியப் பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர். 30 வயது ஹிமான்ஷி குரானாவின்(Himanshi Khurana) கொலை குற்றச்சாட்டில் தேடப்படும் 32 வயது அப்துல் கஃபூரி(Abdul Ghafoori) என்ற சந்தேக நபரைக் கைது செய்ய கனடா சட்ட அமலாக்கப் பிரிவு நாடு தழுவிய பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan Avenue) மற்றும் வெலிங்டன் ஸ்ட்ரீட் வெஸ்ட்(Wellington Street West) அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் ஹிமான்ஷி குரானாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு […]

உலகம் செய்தி

கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போப் லியோ

  • December 24, 2025
  • 0 Comments

கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு போப் லியோ(Pope Leo) அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், “குறைந்தபட்சம் நமது இரட்சகரின் பிறந்த நாளிலாவது நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நாளை அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு வேதனையளிக்கிறது” என்று ரோம்(Rome) அருகே உள்ள காஸ்டல் காண்டோல்போவில்(Castel Gandolfo) உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும், நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் மீண்டும் […]

error: Content is protected !!