கிறிஸ்துமஸிலும் தொடரும் போர் – பரஸ்பரம் ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுப்பு!
ரஷ்யாவும், உக்ரைனும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனுக்குள் 131 ட்ரோன்களை ஏவியதாக கியேவில் உள்ள விமானப்படை தெரிவித்துள்ளது, அவற்றில் 106 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிராந்தியத்தின் “துறைமுகம் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பை” ரஷ்யா குறிவைத்ததாகவும், தொழில்துறை வசதிகளை சேதப்படுத்தியதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரே இரவில் உக்ரைன் ஏவிய குறைந்தது 141 ட்ரோன்களை […]













