ஐரோப்பா

கிறிஸ்துமஸிலும் தொடரும் போர் – பரஸ்பரம் ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுப்பு!

  • December 25, 2025
  • 0 Comments

ரஷ்யாவும், உக்ரைனும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனுக்குள் 131 ட்ரோன்களை ஏவியதாக கியேவில் உள்ள விமானப்படை தெரிவித்துள்ளது, அவற்றில் 106 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிராந்தியத்தின் “துறைமுகம் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பை” ரஷ்யா குறிவைத்ததாகவும், தொழில்துறை வசதிகளை சேதப்படுத்தியதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,  ஒரே இரவில் உக்ரைன் ஏவிய குறைந்தது 141 ட்ரோன்களை […]

உலகம் ஐரோப்பா செய்தி

நத்தார் தினத்தில் பிரித்தானியாவை வாட்டும் கடும் குளிர் – முதியவர்களுக்குச் சுகாதாரத்துறை எச்சரிக்கை

  • December 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் வேல்ஸில் இன்று கடும் காற்றுடன் கூடிய குளிரான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மின்சாரம் மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் சுகாதாரத்துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்பொழியுடன் கூடிய ‘வெள்ளை நத்தார்’ (White Christmas) அமையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், இம்முறை […]

உலகம்

நீண்ட தூர ஏவுகணை மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பார்வையிட்ட கிம்!

  • December 25, 2025
  • 0 Comments

வட கொரிய  ஜனாதிபதி கிம் ஜாங்-உன் ( Kim Jong Un) நாட்டின் புதிய நீண்ட தூர ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். கிழக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஏவுகணை ஏவுதளத்திலிருந்து வட கொரியத் தலைவர் சோதனைகளை மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சோதனை செய்யப்படும் புதிய நீண்ட தூர ஏவுகணைகள் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முயற்சியையும் […]

உலகம்

கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் – 05 பேர் பலி!

  • December 25, 2025
  • 0 Comments

தான்சானியாவில் (Tanzania) உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹெலிகாப்டரானது நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்பு ஹெலிகாப்டராக செயற்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், விமானி, உள்ளுர் மருத்துவர் மற்றும் சுற்றுலா  வழிகாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் வழங்கப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக […]

இந்தியா செய்தி

தமிழகத்திற்குள் நுழையப் பறவை காய்ச்சல் பீதி: கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள்

  • December 25, 2025
  • 0 Comments

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது. அங்குள்ள பண்ணைகளில் கோழிகள் மற்றும் வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாதிரி சோதனையில் எச்-1, என்-1 வகை பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்குள் நோய் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்காசி, கோவை, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லைகளில் […]

இலங்கை செய்தி

சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு: நாளை நாடு தழுவிய ரீதியில் 2 நிமிட மௌன அஞ்சலி

  • December 25, 2025
  • 0 Comments

நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது. 35,000-இற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரழிவையும், அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் பிரதான நினைவு நிகழ்வு காலி, பெரலிய சுனாமி நினைவிடத்திற்கு அருகில் நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதேபோல், உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், நாளை […]

உலகம்

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு – 05 பேர் பலி!

  • December 25, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ (Borno) மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மாநிலத் தலைநகரான மைதுகுரியின் கம்போரு சந்தையில் மாலை தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் மேலும் 35 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலை நடத்தியதாக எந்தக் குழுவும் ஒப்புக் கொள்ளவில்லை. வடகிழக்கு நைஜீரியாவில் பொதுமக்களுக்கு எதிராக அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா உலகம் செய்தி

முடிவுக்கு வந்தது எச்-1பி குலுக்கல் முறை

  • December 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த எச்-1பி விசா குலுக்கல் முறையை (Lottery System) ரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக ஊதியம் மற்றும் அதிகத் திறமை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் இறுதி செய்துள்ளது. இந்த புதிய ‘வெயிட்டட் அப்ரோச்’ (Weighted Approach) நடைமுறை, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின்படி, அதிக ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு விசா கிடைக்க நான்கு மடங்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அவுஸ்திரேலியாவில் சைக்கிள் விற்பனை கடும் சரிவு – இ-பைக்குகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

  • December 25, 2025
  • 0 Comments

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அவுஸ்திரேலியாவில் பெரும் வளர்ச்சியைக் கண்ட சைக்கிள் ஓட்டுதல் துறை, தற்போது கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் சந்தையில் தேங்கிக் கிடக்கும் அதிகப்படியான கையிருப்பு காரணமாக, இந்த ஆண்டு விற்பனை எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் மிதிவண்டிகளுக்கான தேவை வேகமாகக் குறைந்துள்ளது. இதனால் ’99 பைக்குகள்’ போன்ற முன்னணி நிறுவனங்கள் கூடத் தமது வணிக வலையமைப்பை விரிவுபடுத்த […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் கொழும்பில் குடியேறினார் மஹிந்த! பின்னணி என்ன?

  • December 25, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீண்டும் கொழும்பில் (Colombo) குடியேறியுள்ளார் என தெரியவருகின்றது. நுகேகொடை (Nugegoda) , மிரியான (Mirihana) பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள (Wijerama Mawatha) அரசாங்க உத்தியோகப்பூர்வ வதிவிடத்திலேயே மஹிந்த ராஜபக்ச தங்கி வந்தார். எனினும், முன்னாள் […]

error: Content is protected !!