இந்தியா செய்தி தமிழ்நாடு

திமுகவே தமிழ்நாட்டில் மத அரசியல் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

  • December 25, 2025
  • 0 Comments

இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் மத அரசியல் செய்வது திமுக  என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் கலையரங்கில் இன்று மாலை இடம்பெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து […]

இலங்கை செய்தி

மாத்தறை, பெலியத்த வீதியில் வாகன விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்

  • December 25, 2025
  • 0 Comments

மாத்தறை-பெலியத்த வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் டிப்பர் லாரியும் பேருந்தும் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் செய்தி

காசாவில் அமைதியற்ற கிறிஸ்துமஸ் – தாக்குதல்களிடையே பிரார்த்தனைகள்

  • December 25, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் சத்தங்களுக்கிடையே, காசாவின் கிறிஸ்தவ சமூகத்தினர் இந்த ஆண்டு அமைதியற்ற சூழலில் கிறிஸ்துமஸை அனுசரித்ததாக கூறப்படுகிறது. காசாவில் உள்ள பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டதுடன், சில இடங்களில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக அல் ஜஸீராவின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெரும் கொண்டாட்டங்களுக்கு பதிலாக, தேவாலயங்களுக்குள் சிறிய அளவிலான பிரார்த்தனைகள் மட்டுமே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஈரானின் […]

செய்தி விளையாட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

  • December 25, 2025
  • 0 Comments

ஜெய்ப்பூர்(Jaipur) போக்சோ நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளின்(Yash Dayal) முன்ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. ஜெய்ப்பூர் போக்சோ நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்படி, யாஷ் தயாள் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் எதுவும் கூறவில்லை, மேலும் இதுவரையிலான விசாரணையில் அவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது, எனவே இந்த கட்டத்தில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார்(Sanganer Sadar) காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு […]

இலங்கை செய்தி

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா  மீண்டும் திறப்பு

  • December 25, 2025
  • 0 Comments

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக  சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய பரிந்துரைகளின்படி சில பகுதிகள், குறிப்பாக நுழைவு வாயிலுக்கு அருகிலுள்ள குளப் பகுதி மற்றும் பாதை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியாளர்கள் விசேட உதவித் திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

கிறிஸ்துமஸ் தினத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட 03 விமானங்கள்!

  • December 25, 2025
  • 0 Comments

கிறிஸ்துமஸ் தினமான இன்று 17 மணிநேரத்திற்குள் மூன்று அட்லாண்டிக் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத இரண்டு தரையிறக்கங்கள் இன்று காலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஸ்டனில் (Boston) இருந்து அதிகாலை 1.50 மணிக்கு   புறப்பட்டு பாரிஸுக்குப் பயணித்துக் கொண்டிருந்த டெல்டா ஏர் லைன்ஸ் (Delta Air Lines) விமானம் DL-224  மருத்துவ அவசர நிலையை அறிவித்ததை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து லண்டனுக்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், மருத்துவ அவசரநிலையை அறிவித்ததை […]

உலகம்

மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 08 பேர் பலி!

  • December 25, 2025
  • 0 Comments

மெக்சிகோவில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஏறக்குறைய 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையின் வளைவுகள் உள்ள பகுதியில் தடுப்பொன்றில் மோதிய பேருந்து பின்னர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களின் சொந்த இருப்பிடங்களுக்கு பயணித்த பலர் குறித்த பேருந்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.    

உலகம் ஐரோப்பா செய்தி

உக்ரைன், ரஷ்யா ஒப்பந்தம் உருவாக நேரடி பேச்சுவார்த்தைகள் தேவை – போப்பின் கிறிஸ்துமஸ் உரை  

  • December 25, 2025
  • 0 Comments

உக்ரைனும் ரஷ்யாவும் போரைக் நிறுத்த நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்த தைரியமாக இருக்க வேண்டும் என போப் லியோ (Leo) தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தனது முதல் கிறிஸ்துமஸ் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் நேர்மையான, மரியாதையுள்ள உரையாடலை இரு நாடுகளும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இரு […]

ஐரோப்பா

பிரித்தானியாவை அச்சுறுத்த அணுக் குண்டுவீச்சு விமானங்களை அனுப்பிய ரஷ்யா!

  • December 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை அச்சுறுத்தும் நோக்கில் நோர்வே கடல் வழியாக நீண்ட தூர அணுக் குண்டு வீச்சு விமானங்களை ரஷ்யா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளை கோபமடைய செய்ய வேண்டுமென்றே ரஷ்யா மேற்படி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “ரஷ்ய விண்வெளிப் படைகளின் Tu-95MS நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் நோர்வே கடல் வழியாக கொண்டுவரப்பட்டுள்ளதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விமானங்கள் 07மணிநேரத்திற்கும் அதிகமாக பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கரடிகள்” என்று அழைக்கப்படும் இந்த விமானங்கள் முதன்முதலில் 1950களில் […]

அரசியல் இலங்கை செய்தி

மனசாட்சி பற்றி பேசும் என்.பி.பி. பிள்ளையான் தரப்பின் ஆதரவை எந்த அடிப்படையில் பெற்றது?

  • December 25, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியினர் NPP மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் Mujibur Rahma தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட வேண்டும் என மாநகர மேயர் கோரிக்கை விடுத்திருந்தார். கொழும்பு மாநகரசபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னரே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் […]

error: Content is protected !!