அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியில் ஊடகச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: ஐதேக கடும் சீற்றம்!

  • December 26, 2025
  • 0 Comments

ஊடகச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இடமளிக்காது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றை இலக்கு வைத்து, அதன் உரிமத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஊடகங்களுக்கு சுதந்திரமளிக்கும் […]

உலகம் செய்தி

மோசடி, துஷ்பிரயோக குற்றச்சாட்டு – வெளிநாட்டு தத்தெடுப்புக்களை நிறுத்திய தென்கொரியா!

  • December 26, 2025
  • 0 Comments

வெளிநாட்டவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை நிறுத்தவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. வெளிநாட்டு தத்தெடுப்புகளுடன் தொடர்புடைய பரவலான மனித உரிமை மீறல்களை  கண்டறிதல் மற்றும் இழப்பீடுகளை உறுதி செய்வதில் சியோல் தோல்வியடைந்ததாக ஐ.நா விமர்சித்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்பட்ட குழந்தைகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக புலனாய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஐ.நா மட்டத்தில் குறைவாக விசாரணை செய்யப்பட்டாலும், தென்கொரியா மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1970கள் மற்றும் 1980களில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் […]

உலகம் செய்தி

மெகா ஊழல்: மலேசிய முன்னாள் பிரதமர் மீண்டும் குற்றவாளி எனத் தீர்ப்பு

  • December 26, 2025
  • 0 Comments

மலேசியாவின் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் ( 1Malaysia Development Berhad) அரசு நிதியிலிருந்து பல பில்லியன் டொலர் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் குற்றவாளி என இன்று (டிசம்பர் 26, 2025) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் ( 1Malaysia Development Berhad) முதலீட்டு நிறுவனத்திலிருந்து சுமார் 2.3 பில்லியன் ரிங்கிட் பணத்தை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட இரண்டாவது பெரிய வழக்கில், நஜிப் ரசாக் மீதான 4 அதிகார துஷ்பிரயோகக் […]

இந்தியா செய்தி

டெல்லியில் அபாயகரமான அளவில் வளி மாசுபாடு: 407 ஆகப் பதிவு

  • December 26, 2025
  • 0 Comments

இந்தியத் தலைநகர் டெல்லியில் வளி மாசுபாடு இன்று 407 என்ற மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. நத்தார் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு சாலைகளில் அதிகரித்த வாகன நெரிசலே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. டெல்லியின் வளி மாசுபாட்டிற்கு 40 சதவீதக் காரணம் வாகனப் புகை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிலை தொடர்ந்தால் பாரதூரமான பொதுச்சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் இது இந்தியாவின் மிகக்கடுமையான நுரையீரல் சார்ந்த […]

உலகம் ஐரோப்பா செய்தி

ஹேஸ்டிங்ஸில் குழாய் உடைப்பு: கிறிஸ்மஸ் தினத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

  • December 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் ஹேஸ்டிங்ஸ் (Hastings) பகுதியில், பிரதான குழாய் உடைப்பு காரணமாக கிறிஸ்மஸ் தினமான நேற்று நூற்றுக்கணக்கான வீடுகளில் நீர் விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டது. ஃபேர்லைட் (Fairlight) நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் மிகக் குறைந்த நிலையை எட்டியதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நீர் (Southern Water) நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஹாம் பிளேஸ் (Pelham Place) பகுதியில் அவசரகால போத்தல் குடிநீர் விநியோக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், 18 ஆண்டுகளுக்கு முன்பே ‘பழையது’ என அறிவிக்கப்பட்ட குழாய்களை மாற்றாததே இந்தத் […]

உலகம் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து தேர்தல் திருத்தம்: அரசியல் நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை

  • December 26, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க, அரசியல் கட்சிகளுக்கான நிதி நன்கொடைகளுக்கு உடனடி உச்சவரம்பு விதிக்க வேண்டும் என 19 சிவில் அமைப்புகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய தேர்தல் மசோதாவில், வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதுடன், அடையாளம் காண முடியாத கிரிப்டோ கரன்சி (Cryptocurrency) நன்கொடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என தேர்தல் சீர்திருத்தக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. சமீபத்தில் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சிக்குக் […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று பிரிட்டனுக்கே கடன் வழங்கியது இலங்கை : இன்று யாசகம் பெறும் நிலை!

  • December 26, 2025
  • 0 Comments

“ 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் வழங்கிய நாடுதான் இலங்கை. ஆனால் இன்று வெளிநாடுகளிடம் யாசகம் பெறும் நிலைமையே காணப்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கை தன்னிறைவடைந்திருந்தது. யாசகம் பெற்று வாழவில்லை. […]

உலகம்

அமெரிக்காவின் கொள்கைகள் – இந்தியாவுடன் கூட்டு சேரும் சீனா!

  • December 26, 2025
  • 0 Comments

அமெரிக்கா தனது பாதுகாப்புக் கொள்கையைத் திரித்து, தனது நாட்டிற்கும் பிற நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகளை விதைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, சீனா பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியாவுடன் சிறப்பாக செயல்படவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா இந்தியாவுடனான உறவுகளை மூலோபாய மதிப்பு மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அடிப்படையற்ற மற்றும் […]

இலங்கை

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2004 சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் நினைவேந்தல்!!

  • December 26, 2025
  • 0 Comments

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, சுனாமி மற்றும் பிற இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துகிறது வியட்நாம்!

  • December 26, 2025
  • 0 Comments

இலங்கைக்கும் (Sri Lanka) , வியட்நாமுக்கும் (Vietnam) இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் (Nalinda Jayatissa), இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாமுக்கும் (Trinh Thi Tam) இடையிலான சந்திப்பு நேற்று (26) நடைபெற்றது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!