தாய்லாந்து கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொள்வதாக கம்போடியா குற்றச்சாட்டு
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்து விமானப்படை, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கம்போடியாவின் இராணுவ நிலைகளின் மீது இன்று வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பிறகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. ஆனால் கம்போடியா பாதுகாப்பு அமைச்சகம், தாய்லாந்து பொதுமக்களின் வீடுகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது. இதன்போது பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தற்காலிக […]













