ஐரோப்பா செய்தி

பேரழிவின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி நகரம்

  • December 28, 2025
  • 0 Comments

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி (Barnsley) நகரம் தற்போது மறுமலர்ச்சி அடைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி சுரங்கத் தொழில் சரிந்ததைத் தொடர்ந்து பார்ன்ஸ்லி (Barnsley) நகரத்திர் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான வேலை இழந்ததால் நகரம் சரிவின் விளிம்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பார்ன்ஸ்லியை வந்தடைந்துள்ளனர். இது யார்க் போன்ற முக்கிய நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ன்ஸ்லி 1086 ஆம் ஆண்டு டோம்ஸ்டே புத்தகத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல் : நாசவேலைக்கான திட்டமா?

  • December 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவச்  சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உள்கட்டமைப்பை வரைப்படமாக திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரித்தானியாவையும், அயர்லாந்தையும் இணைக்கும் எரிவாயு குழாய்த்திட்டத்தை ஆய்வு செய்தபோது, ரஷ்யாவிற்கு சொந்தமானது என நம்பப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் செயற்பாட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் சொந்த நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட நாசவேலை நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

சான் பிரான்சிஸ்கோ நகரையே ஸ்தம்பிக்கவைத்த வேமோ ரோபோடாக்சிகள்- கரணம் இதுவா?

  • December 28, 2025
  • 0 Comments

டிசம்பர் 20, 2025 அன்று சான் பிரான்சிஸ்கோ (SAN FRANCISCO) நகரின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் மின்தடை. இது அந்த நகரின் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பைச் சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த நகரில் ஒரு துணை மின்நிலையத்தில் (PG&E substation) ஏற்பட்ட தீ விபத்தால் நகரின் மூன்றில் ஒரு பகுதி இருளில் மூழ்கியது. சுமார் 130,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த மின்தடையால் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

  • December 28, 2025
  • 0 Comments

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு […]

ஐரோப்பா

நோர்டிக் நாடுகளில் வீசும் புயல் – சுவீடனில் மின்துண்டிப்பு!!

  • December 28, 2025
  • 0 Comments

நோர்டிக் நாடுகளில் வீசிய சக்திவாய்ந்த குளிர்காலப் புயலால் சுவீடனில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜோஹன்னஸ் (Johannes) புயல் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்குப் பகுதியின் பெரும்பகுதியில்  பலத்த காற்று வீசும் என ஸ்வீடிஷ் (Swedish) வானிலை மற்றும் நீர்நிலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி புயல் நிலைமை காரணமாக ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்வீடனில், 40,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின் தடையால் […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தோஹாவிலிருந்து வந்த விமானத்திற்கு குண்டு மிரட்டல்

  • December 28, 2025
  • 0 Comments

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து இலங்கை வந்த விமானம் ஒன்றிற்கு விடுக்கப்பட்ட போலி குண்டு மிரட்டல் காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (டிசம்பர் 28) அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.44 மணியளவில் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணிகளாக மாறுவேடமிட்டுள்ள நான்கு பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக விமான நிலைய மின்னணு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மின்னஞ்சல் ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் […]

ஐரோப்பா செய்தி

போர் களமா? பொருளாதார களமா? : புதிய பில்லியனர்களை உருவாக்கிய புட்டின்!

  • December 28, 2025
  • 0 Comments

​​ரஷ்யாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மேற்கத்தேய நாடுகளின் தடைகள், சொத்து முடக்கம் என்பன வெறும் கண்துடைப்பாகவே காணப்படுவதை இது உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே சமீபத்திய போர் நடவடிக்கை காரணமாக  மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன்,   சொத்துக்களை முடக்கியுள்ளனர். இவ்வாறான ஒரு கடினமான சூழ்நிலையிலும், ரஷ்யா தனது பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்தி வருவதை இந்த புதிய தரவு சுட்டிக்காட்டியுள்ளது. பிப்ரவரி 24, 2022 அன்று […]

#DreamWarriorPictures #SaiAbhyankar #CourtroomDrama #SocialJustice #TamilCinema2026 பொழுதுபோக்கு

சூர்யா 45: ‘கருப்பு’ படத்தில் வக்கீலாக சூர்யா – திரிஷா!

  • December 28, 2025
  • 0 Comments

சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படமான ‘கருப்பு’ (Karuppu) படத்திலும் நடித்து வருகிறார். இது ஒரு சமூக நீதி சார்ந்த கோர்ட் ரூம் டிராமா. இதில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வக்கீல்களாக நடிக்கின்றனர்.   இப்படத்திற்கு ‘கட்சி சேரா’ புகழ் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியானது. படம் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை

  • December 28, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு இவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மாகந்துர மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து முறையான விளக்கமளிக்கத் தவறிய நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். தற்போது 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் டக்ளஸ் […]

இலங்கை செய்தி

“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு

  • December 28, 2025
  • 0 Comments

நாட்டை உலுக்கிய ‘டித்வா’ சூறாவளி தாக்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பொகவந்தலாவை கொட்டியகல தோட்டத் தொழிலாளர்கள் முன்மாதிரியான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தினசரி ஊதியம் பெறும் 1,350 தோட்டத் தொழிலாளர்கள், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்து, இளைஞர் சமூகத்தின் பங்களிப்புடன் திரட்டப்பட்ட ரூ. 1,08,000 நிதியினை அரசாங்கத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இலங்கை வங்கியின் பேரிடர் நிவாரணக் கணக்கில் இந்தத் தொகை […]

error: Content is protected !!