உலகம் செய்தி

குளிர்காலத்தை இலக்கு வைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இந்தியா

  • December 28, 2025
  • 0 Comments

குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் , ஜம்மு பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்படுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க, பாதுகாப்பு படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாதுபாப்பு படைகளின் தீவிர நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக பயங்கரவாதிகள், கிஷ்த்வார் மற்றும் தோடாவில் உள்ள உயரமான மலைப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. […]

இந்தியா செய்தி

தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி – பிரதமர் மோடி

  • December 28, 2025
  • 0 Comments

தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழியெனவும் தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது என்றும் இந்திய பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று தேசத்தின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள் இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையின் அடையாளமானது என்றும் அவர் கூறியுள்ளார். இங்கு […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வறுமையில் உறவினர் பராமரிப்பாளர்கள் – சோபாவில் தூங்க வேண்டிய நிலை

  • December 28, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 1,41,000 குழந்தைகள் பெற்றோர்களால் பராமரிக்க முடியாமல், உறவினர் அல்லது நண்பர் வீட்டில் வளர்க்கப்படுவதாக, கிம்ஷிப் (Kinship) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. பல உறவினர் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை தங்க வைக்க, தங்கள் சொந்த படுக்கையறைகளை விட்டு சோபாவில் தூங்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். இதனால் உடல் வலியும், வறுமையும் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மதிப்பீடுகளின் படி, ஒரு குழந்தையை 18 வயது வரை வளர்ப்பதற்கான செலவு £250,000 பவுண்டுகள் ஆகும், இரண்டு குழந்தைகள் […]

ஐரோப்பா செய்தி

UKவில் பெண்சிசுக்களை கருக்கலைப்பு செய்யும் இந்திய தம்பதியர்!

  • December 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபகாலமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களின் வீதம் அதிகரித்து வருவதாக புதிய கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கருகலைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய தொண்டு நிறுவனமொன்று, பாலின ரீதியாக கருகலைப்பு செய்வது சட்டவிரோதமானது அல்ல எனக் கூறுகிறது. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய பெண்கள் ஆண்குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், இதனால் ஸ்கேன் பரிசோதனைகளை தொடர்ந்து கருகலைப்புகளை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா செய்தி

மான்செஸ்டரில் சிறுமியை வாகனத்தில் மோதிய போதைப்பொருள் குற்றவாளி கைது

  • December 28, 2025
  • 0 Comments

மான்செஸ்டரில் மூன்று வயது சிறுமியை வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றவாளியான ராவல் ரெஹ்மான் (Rawal Rehman) (37), சம்பவத்துக்குப் பின்னர் லங்காஷயரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த அவரை, கிரேட்டர் (Grater) மான்செஸ்டரின் விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கு முன் ரெஹ்மான் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாக கூறப்படுகிறது. விபத்தின் போது சிறுமி உயிரிழந்த பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் அதிகாலை இடம்பெற்ற சோகம் – 03 பேர் மரணம்!

  • December 28, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் ( மேற்கே உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் (Johannesburg) இன்று அதிகாலை இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது மொத்தம் ஆறு பேர் உள்ளே இருந்ததாகவும்,  இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேரை அவசரகால பணியாளர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடலோர நகரமான டர்பனுக்கு அருகில் இருந்த இந்து கோவில் ஒன்று […]

இலங்கை செய்தி

அவசரகால நிலைமை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

  • December 28, 2025
  • 0 Comments

பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுப் பாதுகாப்பு, நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் காலத்தில் அர்மாக் தேவாலயங்களில் கொள்ளை

  • December 28, 2025
  • 0 Comments

  கிறிஸ்துமஸ் நாளில், வடக்கு அயர்லாந்தின் கவுண்டி அர்மாக்(Armagh), நியூடவுன்ஹாமில்டனில் உள்ள இரண்டு தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. டிசம்பர் 25 அன்று அதிகாலை 3 மணி முதல் டிசம்பர் 26 வரை டண்டல்க் (Dundalk)தெரு மற்றும் காசில்பிளேனி (Castleblayney)தெருவில் உள்ள தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் மின்னணு ஸ்பீக்கர்கள் மற்றும் சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தகவல் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மக்கள் 100 வயதை கடந்து வாழ்வதற்கான இரகசியம்! ஆய்வில் வெளியான தகவல்!

  • December 28, 2025
  • 0 Comments

உலகில் ஒரு சில நாடுகளில் வாழும் மக்கள் நூறுவயதை கடந்து வாழ்வது பலருக்கும் வியப்பை அளித்திருக்கும்.  குறிப்பாக ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இலகுவாக நூறுவயதையும் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவரின் உடல், உள ஆரோக்கியம் நீண்டகால உயிர்வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வு மனிதன் நீண்டகாலம் வாழ்வதற்கு மரபணு மூலக்கூறுகளும் முக்கிய காரணமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. […]

உலகம் செய்தி

காபூலில் ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தானின் தேசிய புஸ்காஷி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பு

  • December 28, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய குதிரையேற்ற விளையாட்டான புஸ்காஷியின் (buzkashi)வருடாந்திர தேசிய சாம்பியன்ஷிப் போட்டி காபூலின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து குதிரை வீரர்களும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் திரண்டனர். உயர்மட்ட தலிபான் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புஸ்காஷி என்பது ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டு. இதில் குதிரை வீரர்கள் தோல் போர்த்தப்பட்ட நிறையுடைய மூட்டையை எடுத்துச் சென்று கோல் கோட்டைக் கடக்க வேண்டும். போட்டி முழுவதும் கடும் உடல் […]

error: Content is protected !!