மத்திய கிழக்கு

நாணய பெறுமதியில் வீழ்ச்சி – ஈரானில் மாபெரும் போராட்டம்!

  • December 30, 2025
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து  மத்திய வங்கியின் தலைவர்  முகமது ரெசா ஃபர்சின் (Mohammad Reza Farzin) பதவி விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதே நேரத்தில் தெஹ்ரான் நகர மையத்தில் உள்ள தெருக்களில் போராட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெஹ்ரானில் சில இடங்களில், போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 22 வயதான மஹ்சா […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. அரசாங்கம் குறித்து அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர!

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு (NPP) மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்து வருகின்றது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை இதனை பிரதிலளிக்கின்றது. எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. தேசிய […]

ஆசியா உலகம் செய்தி

அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் பங்களாதேசில் சோகம்: முன்னாள் பிரதமர் காலமானார்!

  • December 30, 2025
  • 0 Comments

பங்களாதேசின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா Khaleda ⁠Zia தனது 80 ஆவது வயதில் இன்று (30) காலமானார். டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்தார். கலீதா ஜியா, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, நீண்டகாலமாக சிகிச்சைப்பெற்று வந்தார். பங்களாதேசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியே கலீதா ஜியா. தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1981 ஆம் ஆண்டில் அரசியல் […]

உலகம்

ஏமன் மீது தாக்குதல் நடத்திய சவுதி அரேபியா – மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

  • December 30, 2025
  • 0 Comments

ஏமனில் உள்ள முகல்லா (Mukalla) துறைமுக நகரத்தின் மீது குண்டுவீச்சு  தாக்குதல் நடத்தியதாக சவூதி அரேபியா இன்று அறிவித்துள்ளது. கப்பலில் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை பிரிவினைவாதப் படைக்கு  அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  குற்றம் சாட்டி இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சவுதி அரேபியா வெளியிட்டுள்ள இராணுவ அறிக்கையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்தை  கருத்தில் கொண்டு, கூட்டணி விமானப்படைகள் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்,  […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் தற்போது நெருக்கடியானநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருகைதந்து, அவரின் அனுபவத்தை நாட்டுக்காக வழங்குவது நல்லது. அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என்பதே எனது கருத்தாகும். அதேபோல அனைத்து […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் நாளை “அரசியல் சமர்”! மண்கவ்வுமா “மனசாட்சி”?

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) நாளை (31) முக்கியமானதொரு அரசியல் சமருக்கு முகம்கொடுக்கின்றது. கூட்டு எதிரணியின் வியூகத்தை தோற்கடித்து இச்சமரில் வெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கூட்டு வியூகத்தை தக்கவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJP) போராடிவருகின்றது. இலங்கையில் உள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபையென்பது (CMC) மிக முக்கியத்துவம்மிக்க சபையாகக் கருதப்படுகின்றது. எனவேதான், அச்சபையின் வரவு- செலவுத்திட்டம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கின்றது. கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் […]

#பொருளாதாரம் #நுகர்வோர்ஆய்வு #பணவீக்கம் #நிதிமேலாண்மை #Inflation2026 #RuthlessSpending #ConsumerSurvey #UKMarket #SmartSpending ஐரோப்பா

பிரித்தானியாவின் ‘பட்ஜெட்’ புரட்சி

  • December 30, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு (Cost of Living) காரணமாக, அந்நாட்டு மக்கள் தங்களின் பணத்தை எங்கே, எப்படிச் செலவிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாகவும் மற்றும் சமரசமற்ற முடிவுகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தற்பொழுது அவசியமற்ற செலவுகளுக்கு ‘நோ'(No) முன்பு சாதாரணமாகச் செலவு செய்த பொழுதுபோக்கு அம்சங்கள், வெளி உணவுகள் மற்றும் சந்தா (Subscription) சேவைகளை மக்கள் தற்போது துணிச்சலாக ரத்து செய்து வருகின்றனர். மற்றும் விலை உயர்ந்த பிராண்ட் […]

#Putin #RussiaUkraineWar #DroneAttack #Zelenskyy #Russia #Ukraine #WorldNews #BreakingNews #PeaceTalks2025 #Valdai உலகம்

புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதலா? ரஷ்யாவின் குற்றச்சாட்டிற்கு உக்ரைன் அதிரடி மறுப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் ஒன்றான ‘வால்டாய்’ (Valdai) இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் முற்றிலுமாக மறுத்துள்ளது. வடக்கு ரஷ்யாவின் நோவ்கோரோட் (Novgorod) பகுதியில் உள்ள புடினின் ‘டோல்கியே போரோடி’ (Dolgiye Borody) இல்லத்தை நோக்கி மொத்தம் 91 தொலைதூர ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) […]

உலகம் செய்தி

அடுத்த வருடம் பிரித்தானியா செல்லும் அர்ஜென்டினா(Argentina) ஜனாதிபதி

  • December 29, 2025
  • 0 Comments

அர்ஜென்டினா(Argentina) ஜனாதிபதி ஜேவியர் மிலே(Javier Milei) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பிரித்தானியாவிற்கு(Britain) விஜயம் செய்வார் என்று ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் செய்தித்தாள் தி டெலிகிராப்(The Telegraph) வெளியிட்ட ஒரு அறிக்கையைத் தொடர்ந்து இந்த விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் நோக்கம் அல்லது மிலே யாரை சந்திப்பார் என்பது குறித்த விவரங்களை ஜனாதிபதி அலுவலகம் வழங்கவில்லை. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ள பால்க்லாந்து(Falkland) தீவுகள் தொடர்பான மோதலில் இருந்து உருவான ஆயுத விற்பனை மீதான […]

உலகம் செய்தி

துருக்கியில் நடந்த மோதலில் 3 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 6 பயங்கரவாதிகள் மரணம்

  • December 29, 2025
  • 0 Comments

வடமேற்கு துருக்கியில்(Turkey) டேஷ்(Daesh) போராளிகள் காவல்துறையினருடன் மோதியதில் மூன்று அதிகாரிகள் மற்றும் ஆறு போராளிகள் உயிரிழந்ததாக துர்க்கிஉள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்தான்புல்லின்(Istanbul) தெற்கே உள்ள யலோவா(Yalova) மாகாணத்தில் உள்ள எல்மாலி(Elmali) மாவட்டத்தில், போராளிகள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் 15 மாகாணங்களில் டேஷ் சந்தேக நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைகளில் […]

error: Content is protected !!