உலகம் செய்தி

உக்ரைனுக்கு 160 கோடி டொலர்கள் நிதியுதவி

  • July 27, 2024
  • 0 Comments

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு முதல்முறையாக 160 கோடி டொலரை ஐரோப்பிய யூனியன் அனுப்பியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டெர் லெயென் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஐரோப்பிய யூனியன் எப்போதும் உக்ரைனுக்கு பக்கபலமாக இருக்கும். அதன் ஒரு பகுதியாக, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளிலிருந்து கிடைத்த 160 கோடி டொலரை அந்த நாட்டுக்கு அனுப்பியுள்ளோம். ரஷ்யாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் போரால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்கவும் உக்ரைனுக்கு இந்தத் தொகை […]

உலகம்

ஸ்பெயினின் மிக மோசமான ரயில் விபத்து : ரயில் ஓட்டுநர், பாதுகாப்பு அதிகாரி குற்றவாளியாக தீர்ப்பு

11 ஆண்டுகளுக்கு முன்பு 79 பேரைக் கொன்ற ரயில் விபத்து தொடர்பாக ஸ்பெயினின் ரயில் ஓட்டுநர் மற்றும் தேசிய ரயில் உள்கட்டமைப்பு ஆபரேட்டர் இன் முன்னாள் போக்குவரத்து பாதுகாப்புத் தலைவர் ஆகியோருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பல தசாப்தங்களில் ஸ்பெயினின் மிக மோசமான ரயில் விபத்தில், 143 பேர் 2013 ஆம் ஆண்டு விபத்தில் காயமடைந்தனர்.

இலங்கை செய்தி

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

  • July 27, 2024
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நீடித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் 2001/931/CFSP பொது நிலைப்பாட்டின்படி அமைக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) புதுப்பித்தது. இந்த பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக கருதப்படும் தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அதன் […]

உலகம் செய்தி

சீனாவில் வெடிப்பு சம்பவம் – ஐவர் பலி

  • July 27, 2024
  • 0 Comments

சீனாவின் ஹெனானில் உள்ள தொழில் நகரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இலங்கை செய்தி

கஞ்சா சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

  • July 27, 2024
  • 0 Comments

பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது போதைப்பொருள் பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவை கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவிற்கு அமைய, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பதுடன் அவரும் மற்றுமொரு அதிகாரிகள் குழுவும் ஆனந்த குமார சுவாமிக்கும் கேணல் டி.ஜெயா மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் […]

இலங்கை செய்தி

யாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது

  • July 27, 2024
  • 0 Comments

வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை கடந்த 14ஆம் திகதி தவறவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் , தனது கைத்தொலைபேசி தவறவிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது , தொலைபேசி தவறவிடப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் […]

இலங்கை செய்தி

யாழில் மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

  • July 27, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு தொடரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இவ் விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. யாழ்நகர வணிகர்கள் மற்றும் பொது மக்களின் தொலைபேசிக்கு அனாவசியமாக அழைப்புக்கள் மூலம் (ரெலிகொம் என்று […]

ஐரோப்பா

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து பங்கேற்ப்பு

வெள்ளியன்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் மாநில செயலாளர் அலெக்ஸாண்ட்ரே ஃபேசல் கலந்து கொண்டார். இது சுவிஸ் பெடரல் கவுன்சிலின் தென்கிழக்கு ஆசிய மூலோபாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது ASEAN கூட்டத்தின் போது, ​​Fasel 2024 ஆம் ஆண்டிற்கான ASEAN தலைவர் பதவியை வகிக்கும் Laos வெளியுறவு மந்திரி Saleumxay Kommasith உடன் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தினார். கூட்டத்தில் ASEAN பங்காளி நாடுகளின் பிரதிநிதிகளும் இருந்தனர்.

இலங்கை

இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • July 27, 2024
  • 0 Comments

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 32,078 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் 7,551 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய […]

மத்திய கிழக்கு

கடுமையான வெப்ப அலையில் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் : அரசு பிறப்பித்த உத்தரவு!

  • July 27, 2024
  • 0 Comments

ஈரானில் ஏற்பட்ட வெப்ப அலையானது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் வணிக நிறுவனங்களையும்  மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்) முதல் 42 சி (சுமார் 107 எஃப்) வரை இருந்ததாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தீவிர வெப்பநிலை காரணமாக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஆற்றலைப் […]

error: Content is protected !!