ஐரோப்பா

விரைவில் உக்ரைனுக்கு விஜயம் செய்யும் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் உக்ரைனுக்குச் செல்வார் என்று இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் மோதலை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், ரஷ்யாவை நேரடியாக குற்றம் சாட்டுவதை இந்தியா தவிர்த்து வருகிறது.

உலகம் செய்தி

வெனிசுலா ஜனாதிபதி தேர்தல் – 25 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருமா?

  • July 28, 2024
  • 0 Comments

ஊழல், தேர்தல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வெனிசுலாவில் ஜனாதிபதித் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. 06 வருட காலத்திற்கு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் போட்டியிடுகிறார். கடந்த 2013-ம் ஆண்டு வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸின் மறைவுக்குப் பிறகு அதிபராகப் பதவியேற்ற நிக்கோலஸ் மதுரோ, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். எவ்வாறாயினும், வெனிசுலாவில் 25 வருடங்களாக ஆட்சியில் […]

விளையாட்டு

முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இலங்கை

  • July 28, 2024
  • 0 Comments

9வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி களமிறங்கினர். இதில் ஷெபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து […]

இலங்கை செய்தி

யாழில் வாகனத்திற்கு தீ வைப்பு

  • July 28, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வாகனம் ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் , தனது வாகனத்தினை , வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வேளை நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு வேளை வாகனத்திற்கு தீ வைத்து விட்டு , வன்முறை கும்பல் தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

யாழ்.பண்ணையில் 10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

  • July 28, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் , மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்ணை பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருமளவாவர்கள் நடை பயிற்சி செய்வதற்கும் , குழந்தைகள் , சிறுவர்களுடன் கடற்கரையில் பொழுதை கழிக்கவும் என கூடுவார்கள். அவ்வாறான நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல் , வீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை […]

இலங்கை செய்தி

கறுப்புஜீலை நினைவேந்தல் – உணர்வுபூர்வமாக யாழில் இன்று அனுஷ்டிப்பு

  • July 28, 2024
  • 0 Comments

யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் இவ் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. இதன் போது படுகொலை செய்யப்படவர்களுக்கு மதத் தலைவர்களால் பொதுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் உட்பட மதத்தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் […]

அறிந்திருக்க வேண்டியவை

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதால், ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து, உக்ரன் போருக்கு உதவும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்கிலும் இந்த இருநாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் துவங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன் அமைதிப் பேச்சு வார்த்தையை ரஷ்யா துவங்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை […]

ஆசியா

பங்களாதேஷ்: குழுத் தலைவர்களை விடுவிக்காவிட்டால் மீண்டும் போராடுவோம் – மாணவர்கள் சூளுரை

  • July 28, 2024
  • 0 Comments

பங்ளாதேஷில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களது குழுத் தலைவர்களை விடுவிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஜூலை 28ஆம் திகதி சூளுரைத்துள்ளனர். போராட்டங்களால் சென்ற வாரம் மூண்ட வன்முறையில் கிட்டத்தட்ட 205 பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை, மருத்துவமனைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி சந்தித்த ஆகப் பெரிய கிளர்ச்சிகளில் ஒன்றாக இந்தப் போராட்டம் கருதப்படுகிறது. நாட்டில் ஒரு வாரத்துக்குமேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ராணுவத்தினர் […]

ஆசியா

தென்கொரியாவில் அதிகரிக்கும் வெப்ப நோய்கள்; மூன்று நாளில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

  • July 28, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் மூன்று நாள்களில் 100க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். பருவமழைக் காலம் விடைபெற்ற பின்னர் தென்கொரியாவில் வெயில் கொளுத்தும் நாள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான சூடு காரணமாக அதனையொட்டிய நோய்கள் அங்கு பரவி வருகின்றன. நிலைமையை விளக்க, கொரிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகவை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுடன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோர் படகு விபத்தில் ஒருவர் பலி

காலேஸுக்கு அருகிலுள்ள சேனலைக் கடக்க முயன்ற படகு ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். முப்பத்து நான்கு பேர் மீட்கப்பட்டு அவசர சேவைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கலேஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 12,000க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில், பிரான்சில் இருந்து கால்வாயை கடக்க முயன்ற நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்

error: Content is protected !!