உலகம்

ரோமில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட 17 வயது சிறுமி : இலங்கை இளைஞர் கைது!

இத்தாலியின் ரோம் நகரில் 17 வயது சிறுமியை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பில் இலங்கை இளைஞர் ஒருவர் இனறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோமில் உள்ள ப்ரிமவேரா மாவட்டத்தில் புதன்கிழமை மாலை இந்தப் படுகொலை நடந்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சந்தேக நபர், இத்தாலிய தலைநகரில் பிறந்தவர்,

கொலை செய்யப்பட்ட மிச்செல் மரியா காசோ கர்ப்பமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நீண்ட நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெருவில் உள்ள குப்பை தொட்டியில் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஒருவர், சடலத்தை பார்த்துவிட்டு, போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட இளைஞரை தற்காலிகமாக தடுத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த இளைஞன் வசிக்கும் வீட்டின் சில பகுதிகளில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கேமராக்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!