உலகம் செய்தி

உளவு குற்றச்சாட்டில் ஜம்மு காஷ்மீரில் 15 வயது சிறுவன் கைது

ஜம்மு-காஷ்மீரின்(Jammu and Kashmir) சம்பா(Samba) மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இந்திய ராணுவ இருப்பிடங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவு நிறுவனம், இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ்(ISI) மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் கையாள்பவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப்(Punjab) காவல்துறையினர் மதோபூர்(Madhopur) பகுதியில் அந்த சிறுவனை கைது செய்தனர்.

இந்நிலையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை அவர் பயங்கரவாத குழு மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சிறுவன் ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக அறியப்படுகிறது.

1923ம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ், சிறுவன் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!