ஆசியா

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் கரக்கில் லொரி மோதியதில் 12 பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் – இந்தோஸ் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் லொரி சென்றுகொண்டிருந்தது. அமிரி சவுக் பகுதியில் சென்றபோது லொரியின் பிரேக் பழுதானது.

இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லொரி முன்னே சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் லொரி மோதியது.

இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்னர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்