துருக்கியில் மதுபானம் அருந்திய 100 பேர் பலி : சுற்றுலா பயணிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள விசேட கோரிக்கை!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/thu-1.jpg)
துருக்கியில் ஏறக்குறைய 100 பேர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை இஸ்தான்புல்லில் பெரிய பிராண்டுகளாக மாறுவேடமிட்டு விற்கப்படும் போலி மதுபானங்களால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் இறந்துள்ளதாக நகர ஆளுநர் வாசிப் சாஹின் தெரிவித்துள்ளார்.
‘போலி’ மதுபானம் குடித்ததால் மேலும் 230 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய நாட்டில் ஜனாதிபதி எர்டோகனின் AK கட்சி விதித்த அதிக வரிகள் மதுபானத்தின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. அதிக வரிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக மதுபான உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை எதிர்கொண்டுள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)