உலகளவில் இ-சிகரெட் பயன்படுத்தும் 10 கோடி பேர்! சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் 10 கோடி பேர் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களில் 1.5 கோடிக்கு மேற்பட்டோர் சிறுவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இ-சிகரெட்டுகள், நிகோடின் கலந்த திரவங்களை ஆவியாக மாற்றி புகையாக விடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
இதில் புரொப்பிலின் கிளைகால், கிளிசரின், கன உலோகங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் உள்ளன.
இந்தவகை பொருட்கள் உடலுக்குத் தீங்கானவை என்றும், புற்றுநோய் உள்பட பல தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இ-சிகரெட்டுகளின் பாதுகாப்பற்ற பயன்பாடு மற்றும் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் முறை என்பன உலகம் முழுவதும் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது.
பல நாடுகள் இவை மீது விலக்குகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இவற்றை எளிதில் அணுகக்கூடிய சூழ்நிலை மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.