ஆசியா

MH370 விமானம் மாயமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி : உறவினர்கள் விடுத்த சிறப்பு கோரிக்கை!

தொலைந்து போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் காணாமல் போன சீனப் பயணிகளின் குடும்பங்கள் பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் பதில்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

குறித்த விமானத்தில் பயணித்த   பயணிகளின் உறவினர்கள் சிலர் இன்று (08.03) பதில்களுக்கான நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தில் அதிகாரிகளை சந்தித்தனர்.

மலேசியத் தூதரகத்துக்குச் செல்லவும் திட்டமிட்டனர். இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இருப்பினும் இதன் வடுக்கள் மறையாமல் நிலைத்து நிற்கிறது.

MH370 விமானம் காணாமல் போயுள்ள நிலையில், இன்றுடன் பத்தாண்டுகள் பூர்த்தியாகுகிறது.

போயிங் 777 மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து 239 பேருடன் பெய்ஜிங்கிற்குப் புறப்பட்ட குறித்த விமானமானது, இலக்கினை சென்றடையாமல் மாயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!