ரஸ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் இரட்டையர்களான சகோதரிகள் உட்பட 10பேர் பலி

உக்ரைனின் ரமடோர்ஸ்கில் உள்ள பீட்சா உணவகம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இரட்டை சகோதரிகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
யூலியா அனாஅக்சென்சென்கோ என்ற 14 வயது சகோதரிகள் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஸ்ய ஏவுகணைகள் இரண்டு தேவதைகளின் இதயதுடிப்பை நிறுத்தின என ரமடோர்ஸ்க் நகரப்பேரவை தெரிவித்துள்ளது.
17 வயது யுவதியொருவரும் உயிரிழந்துள்ளார், எட்டுமாத குழந்தை காயமடைந்துள்ளது
(Visited 12 times, 1 visits today)