இலங்கை செய்தி

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி,

ஜப்பானில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணியான 52 வயதான பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டார் என்ற  குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மரபுரிமை நகரத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்த ஜப்பான் பெண்ணுக்கு தேசிய மசாஜ் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றே, அப்பெண்ணிடம் அவர் தவறாக செயற்பட்டுள்ளார்.

வலி தாங்கமுடியாத அப்பெண், அவரது பிடியில் இருந்து தப்பிவந்து, தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியாக தன்னை இனங்காட்டிக்கொண்டு இவ்வாறு செயற்பட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சிகிச்சையாளர்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் சங்கமித்த மாவத்தையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் கொழும்பு, தம்புள்ளை, கண்டி, அனுராதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு கடந்த 22ஆம் திகதி அநுராதபுரத்திற்குத் திரும்பிய பின்னர் துவிச்சக்கர வண்டியில் நகரில் பயணித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

(Visited 12 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!