செய்தி தமிழ்நாடு

வெயிலின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் பந்தல் பூக்கடை கூலி தொழிலாளிகள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் இணைந்து கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்,

நாள்தோறும் ஆயிரக்கணக்கான  பயணிகள் வெளியூர் செல்ல பேருந்து நிலையம் வரும் நிலையில் தண்ணீர் இன்றி பலரும் தவித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி தங்கள் கூலியில் இருந்து ஒரு சிறிய தொகையை  சேகரித்து பொதுமக்களின்  தாகத்தை தணிக்க மூன்று மாதத்திற்கு தண்ணீர் பந்தல்  அமைக்க திட்டமிட்டு இன்று செங்கத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்து நீர் மோர்  பந்தல் திறந்து வைத்தனர்.

இதனை  செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா திமுக நகர செயலாளர் அன்பழகன் மற்றும் மலர் தொடு வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தில் இணைந்து ரிப்பன் வெட்டி பேருந்து பயணிகளுக்கு தர்பூசணி மோர் ஜூஸ் வழங்கி துவக்கி வைத்தனர்.

 

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி