இலங்கை செய்தி

லிஸ்டீரியா நோய் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தகவல்!

சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாட்டில் இதுவரை லிஸ்டீரியா நோய் நிலைமை இனக்காணப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில்இ லிஸ்டீரியா நோய் நிலைமை காணப்படுவதாக செய்திகள் வெளியாகின. லிஸ்டீரியாசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பற்றீரியாவால் ஏற்படும் ஒரு நோய் நிலைமையாகும். உணவு மாதிரிகள் மற்றும் நீர் ஆகாரங்களிலிருந்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

அதற்கமைய அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நடத்திய சோதனைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படிஇ லிஸ்டீரியோசிஸ் தற்போது நாட்டில் இல்லை என்றும் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை