ஐரோப்பா செய்தி

தெற்கு டெவோன் கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட உக்ரேனிய சிறுமி உயிரிழப்பு!

தெற்கு டெவோனில் உள்ள கடற்கரையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட உக்ரேனிய சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமையன்று டெவோனில் உள்ள டாவ்லிஷ் பகுதியில் இருந்த நிலையில், காணாமல்போனதாக தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில்,  தெற்கு டெவோனில் உள்ள கடற்கரையில் மயங்கிய நிலையில் அவர் இனங்காணப்பட்டார்.

பின்னர் அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அவர் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!