ஆசியா

சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம்

சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க இராணுவம் மற்றும் ஆயுதப்படை குழுக்களும் யுத்த நிறுத்தத்தில் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, உள்ளூர் நேரப்படி மாலை 06:00 மணி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, கார்டூம் தலைநகரின் தெற்கு பகுதியில் மோதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் தலைநகரின் வேறு சில பகுதிகளில் நிலைமை திருப்திகரமாக இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சூடானின் தலைநகரில் உள்ள வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காரணம், மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

சூடான் இராணுவத்திற்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் சில நாட்களாக இடம்பெற்றுவரும் கடும் சண்டையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!