இலங்கை செய்தி

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை நகர சபை அதிகாரப் பிரிவுகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை, கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை