‘கருப்பு’ குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்.ஜே. பாலாஜி!
‘கருப்பு’ படம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji தெரிவித்துள்ளார்.
மேற்படி படம் தொடர்பில் காட்டுத் தீ போல வதந்திகள் பரவிவருகின்றன.
இந்நிலையில் ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘கருப்பு’ படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சூர்யா ரசிகர்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்று தெரியும்.
இந்த காத்திருப்பு பதிலளிக்கும் விதமாக படம் இருக்கும்.
நானும் இரண்டு வருடங்களாக இப்படத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறேன். நானும் இனி நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற எண்ணத்தில் இல்லை.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் படம் எப்போது ரிலீஸ் என்ற அப்டேட் உடன் உங்களை சந்திக்கிறேன்.
படக்குழுவினருக்கும், எனக்கும் இடையில் எவ்வித சண்டையும் இல்லை.” எனவும் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji குறிப்பிட்டுள்ளார்.




