இலங்கை

எதிர்கட்சி தலைவர் சஜித்தின் உயிருக்கு ஆபத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக, சிலக் குழுக்கள் தன்னுடையஉயிருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரிந்தி ஓயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிடிவாதம் பிடிப்பவர்கள் தம்மை கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருக்கலாம்.

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் போட்டி வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். உயிருடன் இருந்தால் போட்டியிடுவேன்.

தேர்தல் நடக்கும் நேரத்தில் உயிருடன் இருந்தால் மட்டுமே என்னால் போட்டியிட முடியும். எனவே, நான் போட்டியிட மாட்டேன் என்று அவர்கள் வற்புறுத்தும்போது எனது உயிருக்கு ஆபத்தில் உள்ளதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்