இலங்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் எனக் கோரிக்கை!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் என்ற  அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியுமே பிரதான விடயங்கள் என   அந்த  அமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை ஒரு தசாப்தகாலமாக பெருந்துயரங்களை துன்பங்களை அனுபவித்துள்ளது எனவும்,  கடந்தகால தவறுகளை சரி செய்து சரியான சட்டமூலத்தை உருவாக்குவது தற்போதைய  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் அந்த அமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்  என்ற அடிப்படையில் தார்மீக உறுதியுடனும் நேர்மையுடனும்; சரியானதை செய்யுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!