March 26, 2025
Follow Us
இலங்கை

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

சுமார் ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு கலந்துரையாட உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள திருத்தங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழுவுக்கு அரசாங்கம் வழங்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு கொழும்பு சந்திப்புகளில் அவதானம் செலுத்தியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்