இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது: ட்ரம்ப்!
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.
“எமது ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் எரிசக்தி சார்ந்த ஏற்றுமதி செய்யும் தேசமாக உருவாகி வருகிறது.
கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா மற்றும் பல உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு நிலக்கரி சார்ந்த ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருந்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றது.
ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதால் இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் கூடுதல் சலுகைகள் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்வதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.
அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்ட பின்பு வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையொழுத்தாகும் என தெரியவருகின்றது.




