மலேசியாவில் பாரிய தீ விபத்து
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு எரிபொருள் நிலையத்திற்கு அருகில் எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் 63 பேர் பாதிப்படைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியிலுள்ளவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
(Visited 28 times, 1 visits today)





